மாநில அரசு வரி உயர்வால்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மேகாலயாவில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது. 

மேகலாயா மாநிலத்தில் பெட்ரோலுக்கான வரி லிட்டர் ஒன்றுக்கு 13.5 சதவீதம் அல்லது ரூ.11 ஆகியவற்றில் எது அதிகமோ, அதுவே வரியாக விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 13.5 சதவீதம் அல்லது ரூ.12 ஆகியவற்றில் எது அதிகமோ அதுவே வரியாக மாற்றியமைக்கப்படுகிறது.

அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.4, இதில் எது அதிகமோ அதுவே வரியாக விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 சதவீதம் அல்லது ரூ.5.50 இதில் எது அதிகமோ அதுவே வரியாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

புதிய விலைப்படி பிர்னிகாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.1 ஆகவும், ஷில்லாங்கில் ரூ.96.83 ஆகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலையும் முறையே ரூ.83.5, ரூ.84.72 ஆக அதிகரித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petrol and diesel increase in Meghalaya


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->