காவல்துறையினருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்...!! வைரலாகும் வீடியோ.!!
peoples thanks to police
இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்துள்ளது. 308 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 857 பேர் சிகிச்சை முடிந்து பூரண நலனுடன் இல்லங்களுக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் காவல் துறையினருக்கு மலர்தூவி பொதுமக்கள் மரியாதையை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil