பொய் சொல்லாத... இண்டிகோ விமானியை அடித்த பயணி: நடந்தது என்ன?
Passenger hit Indigo pilot
டெல்லியில் ஏற்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 150 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னை, பெங்களூர், கேரளத்திலிருந்து கிளம்பும் விமானங்களும் கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரம் புறப்படாமல் இருந்ததால் குழப்பம் அடைந்த பயணிகளிடம், விமானி பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாகவே புறப்படும் என தெரிவித்துள்ளார்.
அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணி 'பொய் சொல்லாத' என தெரிவித்து வேகமாக விமானியை நோக்கி அவரை அடிக்க தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகளை தாக்குதலில் ஈடுபட்ட பயணியை தடுத்து நிறுத்தி அமைதிபடுத்தினர். விமானியை தாக்கிய பயணியின் பெயர் சஹில் கத்தாரியா என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Passenger hit Indigo pilot