பப்ஜி காதலனை தேடி குழந்தைகளுடன் உத்தர பிரதேசத்திற்கு வந்த பாகிஸ்தான் பெண் கைது.! - Seithipunal
Seithipunal


பப்ஜி காதலனை தேடி குழந்தைகளுடன் உத்தர பிரதேசத்திற்கு வந்த பாகிஸ்தான் பெண் கைது.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகர் ரபுபுரா பகுதியை சேர்ந்தவர் சச்சின். இவர் அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இதற்கிடையே ஆன்லைன் பப்ஜி விளையாட்டு விளையாடி வந்த இவருக்கு பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சியில் வசித்து வர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் சீமா ஹைதர் தனது காதலனான சச்சினை பார்க்க வேண்டும் என்று நினைத்து தனது கணவரை விட்டுவிட்டு நான்கு குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு நேபாளம் சென்றுள்ளார். 

அதன் பின்னர் நேபாளத்தில் இருந்து கடந்த மாதம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பேருந்து மூலம் உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளார். அங்கு நெய்டாவின் ரபுபுரா பகுதியில் வசித்து வரும் தனது காதலன் சச்சினை சந்தித்தார். 

இதையடுத்து சச்சினும், சீமாவும் நான்கு குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துள்ளனர். இதற்கிடையே, ரபுபுரா பகுதியில் சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. 

அதன் அடிப்படையில் உ.பி.போலீசார் விசாரணை நடத்தியதில் சீமா ஹைதர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் அவர் தனது 4 குழந்தைகளுடன் பப்ஜி ஆன்லைன் காதலன் சச்சினை தேடி இந்தியாவுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த சீமா மற்றும் அவரது நான்கு குழந்தைகளை கைது செய்தனர், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakisthan woman and four childrens arrested in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->