பஞ்சாப்: பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எஃப்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பறந்து வந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நேற்று இரவு 7:40 மணியளவில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், குவாட்காப்டர் எல்லை வேலிக்கு அருகில் உள்ள வயலில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் மீட்கப்பட்டது. மேலும் ட்ரோனிலிருந்து அப்பகுதியில் ஏதேனும் சரக்குகள் கிழே விழுந்துள்ளதா என்பதை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எல்லை பாதுகாப்புப் படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மட்டும் பஞ்சாபில் இதுபோன்று 3 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan drone shot down by BSF in Punjab


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->