இந்தியா வரும் ஜெர்மனி அதிபர்; 12-ந்தேதி பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!
On the 12th talks will be held with the German Chancellor and Prime Minister Modi
ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13-ந் தேதிகளில் இந்தியா விற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
பிரதமர் மோடி அழைப்பின் பேரில் இந்தியா வரும் பிரீட்ரிக் மெர்ஸ், 12-ந்தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
On the 12th talks will be held with the German Chancellor and Prime Minister Modi