ரூ.100 கோதுமை திருட்டு… 45 ஆண்டுகள் கழித்து கைதான முதியவர்! – மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு
Old man arrested after 45 years for stealing 100 wheat Madhya Pradesh stirs up controversy
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்திலுள்ள பால்காவாடா அருகே அமைந்துள்ள பால்காட் கிராமத்தில், 1980 ஆம் ஆண்டு நடந்த ஒரு சாதாரண திருட்டு சம்பவம், நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர்ப்பெடுத்து போலீஸ் பதிவுகளில் தலைதூக்கியுள்ளது.

அந்த காலத்தில் ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை மூட்டைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவத்தில் சலீம் உட்பட ஏழு பேர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப்போது வெறும் 20 வயதான சலீம், சம்பவத்துக்குப் பிறகு குடும்பத்துடன் அண்டை மாவட்டமான தார் பகுதிக்கு குடிபெயர்ந்து, அங்கே புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
காலம் நகர, வழக்குகள் மங்கியதாக நினைத்திருந்த நிலையில், தற்போது 65 வயதாகும் சலீம் சிறிய கடை நடத்தி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஆனால், மாநிலம் முழுவதும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடிக்கும் நடவடிக்கையை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.
அப்போது சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில், 45 ஆண்டுகளாக தூசி படிந்திருந்த அந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பல ஆண்டுகள் தப்பித்து வந்த சலீமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
‘₹100 கோதுமை திருட்டு… ஆனால் 45 ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை’ என்ற உண்மையை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
English Summary
Old man arrested after 45 years for stealing 100 wheat Madhya Pradesh stirs up controversy