உ.பியில் பரபரப்பு.! தேசியகீதத்தை அவமதித்த மூன்று வாலிபர்கள்.! வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கடந்த 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம் இட்கா பகுதியில் குடியரசுத் தினத்தன்று மூன்று இளைஞர்கள் தேசிய கீதத்தை அவமதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

அந்த வீடியோவில் பதிவாகி உள்ளதாவது, "இளைஞர்கள் தேசிய கீதம் ஒலிக்கும் போது முதலில் சல்யூட் அடித்து, பின்னர் ஆபாசமாக நடனமாடுவது போன்று பதிவாகி உள்ளது. 

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது வீடியோவில் இருந்தவர்கள் இட்கா பகுதியை சேர்ந்த அட்னான், ருகால் மற்றும் ஒரு நபர் என்று மூன்று பேரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. 

இதை அடுத்து, போலீசார் அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களில் அட்னானை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh three young mans insulting national anthem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->