உ.பி. ஆம்புலன்ஸ் மீது அடுத்தடுத்து மோதிய இருசக்கர வாகனம் - ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் சிகிச்சைக்காக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  ஒருவர் சமத்துவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். 

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண் தெரிவித்ததாவது, இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியுள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களில் ஒருவரான ஆயுஷ் வர்மா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் பலத்த காயமடைந்தார். 

இதைத்தொடர்ந்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியும் ஆம்புலன்ஸ் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அதன் பின்னர், காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதேபோல், உயிரிழந்தவரை உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh ambulance two whealer accident young man died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->