உ.பி || மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து  இன்று அதிகாலை நடந்தது. இவ்விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங் தெரிவித்ததாவது, "தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரை கட்டிடத்தின் ஒரு பலவீனமான பகுதியாக இருந்தது. 

இந்நிலையில், அந்த கட்டிடத்தின் உள்ளே எந்த குடும்பமும் வசிக்கவில்லை. ஒரு குடோன் மட்டும் தான் இருந்தது. இந்த சம்பவம் நடந்த போது நான்கு பேர் சில பொருட்களை எடுத்து செல்வதற்காக குடோன் உள்ளே சென்றபோது மேற்கூரை இடிந்து விழுந்தது. 

அதில் அவர்கள் நான்குபேரும் காயம் அடைந்ததால் மீட்பு படையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. சம்பவ இடத்தில் நான்கு புல்டோசர்கள், ஆறு ஆம்புலன்ஸ்கள், ஒரு மருத்துவர் குழு, போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுக்கள் உள்ளிட்டோரும் உள்ளனர்" என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near utrapradesh roof fell down four peoples injured


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->