போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற வாலிபர் - பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் பாந்திரா மேம்பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சிறுவனுடன் வந்த வாலிபர் போலீசார் நிற்பதை பார்த்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தை வலதுபுறமாக திருப்பியுள்ளார். 

அந்த நேரம் பார்த்து இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், நிலை தடுமாறிய வாலிபர் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, சிறுவனுடன் பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். 

இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வாலிபர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மேலும், சிறுவனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், பலியான வாலிபர் ஹெல்மெட் அணியாமலும், வாகன உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்ததும், அதனால் அவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra man died for accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->