பணத்திற்காக மாற்றுத்திறனாளியை கொலை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் நைகாவ் பகுதியில் ஆண் சடலம் ஒன்று முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், மீட்கப்பட்ட நபர் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்த சுனில் திவாரி என்றும், இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத வாலிபர் என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஜூயுசந்திரா பகுதியை சேர்ந்த யஷ்வர்தன் என்பவர் தான் திவாரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், சுனில் திவாரியிடம் செல்போன் இல்லாததால் தனது சகோதரரை தொடர்பு கொள்ளும்படி யஷ்வர்தனிடம் தெரிவித்துள்ளார். அதன் படி யஸ்வர்தனும் செல்போனில் பேசுவது போன்று நடித்துள்ளார். பிறகு சகோதரர் வரும் வரையில் தன்னுடன் இருக்கும்படி யஷ்வர்தன் திவாரியை அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

இதையடுத்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக திவாரியின் முகத்தை கல்லால் சிதைத்து விட்டு, அவருடைய பாக்கெட்டில் இருந்த ரூ.1,000-யை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் யஷ்வர்தனை கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near maharastra man arrested for disabled person kill


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->