ம.பியில் சோகம் - ஹோலி கொண்டாட்டத்தில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். 

இவர்களுடன் பெண்ணின் தம்பி மற்றும் தங்கையும் சென்றனர். இவர்களில், அந்த இளம்பெண் முதலில் குளிப்பதற்காக குளத்தில் இறங்கி, ஆழமான இடத்திற்கு சென்று விட்டார். இதனால் அவர் வெளிவர முடியாமல் நீரில் தத்தளித்தார். 

இதைப்பார்த்த அந்த பெண்ணின் தம்பி, தங்கை இருவரும் அடுத்தடுத்து குளத்தில் குதித்து அக்காவை காப்பாற்றுவதற்கு முயன்றனர். ஆனால், அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் மூன்று பேரும் உயிருக்கு போராடினர். 

இதையடுத்து அந்த பெண்ணின் கணவரும், அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரும் சேர்ந்து ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் ஓரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, விரைந்து வந்த போலீசார் நான்கு பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோலி பண்டிகையின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near madhya pradesh four peoples died in holi festival


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->