பாதுகாப்புத் துறை கண்காட்சி : ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லா படகு - டிஆர்டிஓ சாதனை..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் பாதுகாப்புத் துறை கண்காட்சியின் 12வது பதிப்பு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கண்காட்சி இந்த மாதம் 18 முதல் 22 -ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

பாதுகாப்புத் துறை கண்காட்சியை முன்னிட்டு புனேவில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஆளில்லா, ஆயுதம் பொருத்தப்பட்ட படகு சோதனை நடைபெற்றது. இதையடுத்து, பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கியுள்ள படகு சோதனை பாமா அஸ்கேட் அணையில் நேற்று நடைபெற்றது. 

இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் பிஎம் நாயக் தெரிவித்ததாவது, "இந்த படகில் மனிதர்கள் இல்லாமல் தரைதளத்திலிருந்து ரிமோட்டைக் கொண்டு அதை இயக்கலாம். இந்த படகு, உளவு மற்றும் ரோந்து பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், ஏதேனும் கிளர்ச்சி ஏற்பட்டால் படகில் ஆயுதமும் பொருத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat Defense Department Exhibition remote boat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->