பீகார் : நிலத் தகராறில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத் பகுதியில் நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

இது குறித்து, ஜெகனாபாத் ஏஎஸ்பி ஹரிவன்ஷ் குமார் தெரிவித்ததாவது, "நிலத் தகராறுத் தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பெண் ஒருவர், தனது ஒன்றரை வயது குழந்தையை வைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அந்த நேரத்தில், குழந்தை எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்துள்ளது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்தக் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட எதிர் தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதாக உயிரிழந்த குழந்தையின் தந்தை சினி லால் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near bihar one and half years old baby died for property problam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->