48 மணி நேரத்தில் வெடித்து சிதறும் - மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம், "விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் இன்னும் 48 மணி நேரத்தில் வெடித்து சிதறும் என்றும், இதனை தவிர்க்க 1 மில்லியன் டாலரை பிட்காயினாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மும்பை சாகர் போலீஸார் தெரிவித்ததாவது, "பயணிகளின் கருத்தை பதிவு செய்யும் மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மின்னஞ்சல் நேற்று காலை 11 மணிக்கு வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் குண்டு வெடிக்கும் தலைப்பிட்டு, உங்கள் விமான நிலையத்துக்கு இது இறுதி எச்சரிக்கை.

நாங்கள் தரும் முகவரிக்கு ஒலி மில்லியன் டாலரை பிட்காயினாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 48 மணி நேரத்தில் விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் வெடித்து சிதறும். அடுத்த கட்ட தகவல் 24 மணி நேரத்துக்கு பிறகு தெரிவிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious boy thretend to mumbai airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->