மும்பையில் ஆளில்லா விமானம் பறக்க தடை.!
mumbai police order one month trone cemara ban
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தலின் காரணமாக சுமார் முப்பது நாட்களுக்கு டிரோன் கேமராக்களை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் இன்று மும்பை காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்படுள்ளதாவது:- "விஐபிகளை குறிவைப்பதற்கும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும்" சில பயங்கரவாதிகளும், தேச விரோத சக்திகளும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும்.
அதன் காரணமாக மும்பையில் 30 நாட்களுக்கு பிரஹன்மும்பை போலீஸ் கமிஷனரேட் பகுதியின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில், டிரோன்கள், ரிமோட்-கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய விமானம் அல்லது மைக்ரோ-லைட் விமானம், பலூன்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த தடை உத்தரவு நவம்பர் 13 முதல் டிசம்பர் 12 வரை அமலில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mumbai police order one month trone cemara ban