நந்திகிராம் இடைத்தேர்தல்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரின் தாயார் போட்டி..!
Mother of Chief Minister Suvendu Adhikaris aide to contest the Nandigram by election
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களைக் கடந்து, 208 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது.
2011 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) படுதோல்வி அடைந்து இத்தேர்தலில் தனது ஆட்சியை இழந்துள்ளது.
பாஜ முதல்முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், முதல்வராக சுவேந்து அதிகாரி, மே 06-ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு 03 நாட்களுக்கு முன்பு அவரது தனி உதவியாளராக இருந்த சந்திரநாத் ராத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த தேர்தலில் முதல்வர் சுவேந்து அதிகாரி, நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், நந்திகிராம் தொகுதியில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வரும் அக்டோபர் 06-ஆம் தேதி நந்திகிராம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முதல்வர் சுவேந்து அதிகாரியின் முன்னாள் தனி உதவியாளர் சந்திரநாத் ராத்தின் தாயார் ஹசிராணி ராத், பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் அவருக்கு ஆதரவாக, முதல்வர் சுவேந்து அதிகாரி பிரசாரம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
English Summary
Mother of Chief Minister Suvendu Adhikaris aide to contest the Nandigram by election