உ.பி.யில் அதிர்ச்சி: மாயமான சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிப்பு - கற்பழித்துக் கொல்லப்பட்டதாக புகார் - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள திர்வா பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கடந்த புதன்கிழமை ஹோலி தினத்தன்று திடீரென காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் தந்தை திருவா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிறுமி திர்வா கிராமத்திற்கு வெளியே உள்ள மரத்தில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டார். 

இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினர், கால்நடைகளுக்கு புல் அறுக்க சென்றபோது, யாரோ சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவரை தூக்கில் தொங்க விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் குடும்ப உறுப்பினர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி மகேஷ் வீர் சிங் தெரிவித்தார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகேஷ் வீர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Missing girl found hanging in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->