கொரோனா தொற்று அதிகரிப்பு! ஹரியானா மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஹரியானா  மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் நேற்று 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் மாவட்டங்களில் மக்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குருகிராம், பரிதாபாத், சோனிபட், ஜஜ்ஜார் மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று ஹரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Masks are madatoy for three districts in haryana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->