அதிர்ச்சி சம்பவம்... மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட 2 பேர் திடீர் மரணம்!  - Seithipunal
Seithipunal


மும்பையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர்  கலந்து கொண்டனர். 

இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நினைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தாவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸ்வர்தீப் பானர்ஜி (வயது 40) மாரத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து விட்டார். 

இவரை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் ராஜேந்திர போரா (வயது 74) என்ற முதியவரும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

மேலும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட 22 பேர் மூச்சு திணறல், மயக்கம் போன்ற காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

marathon participating 2 people died 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->