கிரிக்கெட் விளையாட்டின் போது நேர்ந்த துயரம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!!
man shoot boy while playing cricket
உத்தரகாண்டில் உள்ள தஹ்ரி என்னும் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராம்லால் மற்றும் பிஜேந்திர கண்டாரி என்னும் இரண்டு பேர் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சிறுவன் ஒருவன் அடித்த ஷாட்டில் பந்து அந்த பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ராம்லால் என்பவரின் மீது விழுந்துள்ளது. பின்னர் அந்த பந்தை எடுப்பதற்காக மகேஷ் என்னும் 12 வயது சிறுவன் வந்துள்ளான். அப்போது பந்து தன் மீது மிகுந்த கோபத்தில் இருந்த ராம்லால், பிஜேந்திர கண்டாரி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பந்து எடுக்க வந்த சிறுவனை சுட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் அந்த சிறுவனின் கண் அருகில் குண்டு துளைத்து படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குண்டு பாய்ந்த சிறுவனுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பந்தெடுக்க வந்த சிறுவனை துப்பாக்கியால் தாக்கிய ராம்லால் மற்றும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் மது அருந்தி விட்டு பேசிக்கொண்டு இருப்பதும், மதுபோதையில் துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
English Summary
man shoot boy while playing cricket