பெண் நோயாளியிடம் அத்து மீறிய மருத்துவமனை ஊழியர் - ராஜஸ்தானில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இளம்பெண் அட்மிட் செய்யப்பட்டுள்ள ஐசியூ அறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மருத்துவமனை ஊழியர் சிராக் யாதவ் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட முயன்றுள்ளார். இதனால், பயந்துபோன சிராக் யாதவ் அந்த பெண்ணின் வாயை பொத்தி மயக்க ஊசி செலுத்தியுள்ளார். 

சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அந்த பெண்ணை சிராக் யாதவ் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் மயக்கத்தில் இருந்து கண்விழித்த அந்த இளம்பெண் சம்பவம் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் சிராக் யாதவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for harassment to patient in rajasthan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->