பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - விசாரணையில் சிக்கிய வாட்ச்மேன்.!
man arrested for harassment in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, மும்பையில் மலாட் பகுதியில் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் நான்கு வயது மாணவியை ஐம்பத்து நான்கு வயதுடைய வாட்ச்மேன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்குச் சென்ற குழந்தையின் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருப்பதை பார்த்த அவரது தாய், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு பரிசோதனை செய்த போது, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையறிந்த மாணவியின் தாய், சம்பவம் குறித்து மல்வானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், குற்றவாளி வாட்ச்மேனை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவியை ஆளில்லாத வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment in maharastra