புதுச்சேரி.! குடிப்பதற்கு பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் குடிப்பதற்கு பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மூதாட்டி அஞ்சலையை கடைசியாக சந்தித்து விட்டுச் சென்ற அண்ணன் மகன் சுரேஷ் என்பவரை தேடிவந்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவான சுரேஷை போலீசார் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குடிப்பதற்கு தந்தையிடம் பணம் திருட முடியாததால், நலம் விசாரிப்பது போல் அத்தை வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அங்கிருந்த 53 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for beheading own aunt in Puducherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->