திரிணாமுல் அமைச்சரின் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் மம்தா பானர்ஜி! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் அகில் கிரி குடியரசு தலைவரை உருவ கேலி செய்த நிகழ்வு சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பாஜகவை சேர்ந்த சுரேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில் கிரி குடியரசுத் தலைவரை உருவ கேலி செய்தார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அகில் கிரி " சுரேந்து அதிகாரி எனது உருவம் சரியில்லை என கூறுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது மக்களுக்கான கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தோற்றத்தின் அடிப்படையில் யாரையும் எடை போடாது. உங்கள் ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த கேள்வி எழுப்பும் பொழுது அருகில் இருந்த சிலர் சிரித்தனர், இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலானது. இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. குடியரசு தலைவரை அகில் கிரி அவமானத்தை செய்து விட்டார் உடனடியாக அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக போர் கொடி உயர்தியது. 

மேலும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஒரிசாவில் இதற்கு எதிர்ப்பும் வலுத்தது. அமைச்சர் அகில் கிரி பதவி விலக கோரி பாஜக சார்பில் போராட்டம் நடந்தது. பாஜக போராட்டத்தின் எதிரொலியாக குடியரசு தலைவர் பற்றி சர்ச்சை பேச்சிற்கு அமைச்சர் அகில்கிரி மன்னிப்பு கேட்டார். 

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பற்றி அகில் கிரியின் கருத்துக்கு முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார். மம்தாவின் சார்பாக பேசிய செய்தி தொடர்பாளர் கூறுகையில் "குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பற்றிய அகில்கிரியின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற கருத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அகிலகிரியை எச்சரித்துள்ளது" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Apologizes for Ministers Controversial Comment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->