காதல் to கலவரம்! அண்ணியின் தங்கையை கட்டி வைக்க மறுத்ததால் துப்பாக்கிச் சூடு...! வாலிபர் escape...!
Love to riot Shooting for refusing to tie up brother in law sister Youth escapes
அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் சகோதரிகளான ஷீனு (25) மற்றும் ரீது (23) என்பவர்கள். இதில் இருவரும் ஷீனுவின் கொழுந்தன் (brother-in-law) சுனில் என்பவருக்கு ரீதுவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

இதில் தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் சுனில் ஆத்திரமடைந்து ஷீனு மற்றும் ரீதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால் ரெயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வரும் வழியில் இருவரையும் தான் வைத்திருந்த துப்பாக்கியல் சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் இருவரும் படுகாயமடைந்து கீழே சரிந்தனர்.
இதைத்தொடர்ந்து சுனில் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள், ரோஹத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சுட்டுவிட்டு தப்பி ஓடிய சுனிலை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.
English Summary
Love to riot Shooting for refusing to tie up brother in law sister Youth escapes