லாட்டரி அதிர்ஷ்டம்! பீகாரில் இல்லாமல் நல்கொண்டாவில் 10 மாத குழந்தை வீட்டின் உரிமையாளர்...! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராமபிரம்மன், சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க நினைத்தார்.

ஆனால் பலரை ஈர்க்க முடியாததால், அவர் முற்றிலும் புதுமையான யோசனையை பயன்படுத்தினார். ரூ.500க்கு பரிசு கூப்பன்கள் அச்சிட்டு, அவற்றை வினியோகித்தார்.

இந்த கூப்பன்களில் ஒருவரை அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்து வீட்டையும் நிலத்தையும் பரிசாக வழங்குவார் என விளம்பர பலகையில் அறிவித்தார்.இதைக் கேட்டும், ஏராளமானோர் ஆர்வமாக கூப்பன்களை வாங்கினர்.

இதில் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சங்கர், தனது பெயர், மனைவி மற்றும் 10 மாத குழந்தை ஹன்சிகா, மகள் சாய்ரிஷிகா ஆகியோரின் பெயர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கூப்பன்களை வாங்கி, மொத்தம் 4 கூப்பன்களை பெற்றார்.கடந்த நாள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்ய குலுக்கல் நடைபெற்றது.

அதில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் நிலம் இந்தச் சிறிய பரிசு நாயகிக்கு சொந்தமாகி, குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பெருமிதம் கொள்வதாக கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lottery luck 10 month old baby owner house Nalgonda not Bihar


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->