ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது திரவ வீச்சு - பாதயாத்திரையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட பாதயாத்திரையில் அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இன்று நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் கலந்துகொண்ட போது கெஜ்ரிவால் மீது திரவம் வீசப்பட்டுள்ளது. உடனே அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திரவம் வீசிய நபரைப் பிடித்து அடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

இந்த சம்பவத்தால் பாதயாத்திரையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் பின் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார். நாட்டின் தலைநகரில் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் சாமானியர்கள் எப்படி நடமாட முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி மத்திய பாஜக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

liquid throw to aap leader aravind kejriwal in delhi


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->