ஆண்-ஆண், பெண்-பெண் திருமணம்! உச்சநீதிமன்றத்தில் கடுமையாக எதிர்த்த மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


இந்திய குடும்ப அலகுடன் ஒப்பிடத்தக்கது மற்றும் அவை ஒரே மாதிரியாகக் கருதப்பட முடியாத தெளிவான வேறுபட்ட வகுப்புகளாகும்.  விடுத்த கோரிக்கையை எதிர்த்து மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது .

உச்சநீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுவை மத்திய அரசு எதிர்த்து உள்ளது. மேலும், இது இந்திய குடும்ப அலகுடன் ஒப்பிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரே பாலின திருமணத்தைசட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி பல்வேறு மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், ஒரே பாலின (LGBTQ) திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்கள் எந்தத் தகுதியும் இல்லாதவை. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த அடிப்படையிலும் இல்லாமல், மேற்கத்திய முடிவுகளை இறக்குமதி செய்ய முடியாது. ஒரே பாலினத்தவர்களால் கூட்டாளிகளாக ஒன்றாக வாழ்வார்கள். ஆனால், 'கணவன், மனைவி மற்றும் குழந்தைகள்' என்ற இந்தியக் குடும்பக் கொள்கையுடன் இதனை ஒப்பிட முடியாது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LGBTQ Centre in SC opposes legal recognition of same sex marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->