தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன் (வயது 65). இவர் சம்பவத்தன்று இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Laborer dies after falling from coconut tree in Puducherry


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->