தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன் (வயது 65). இவர் சம்பவத்தன்று இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer dies after falling from coconut tree in Puducherry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->