'கும்பமேளா அர்த்தமற்றது'; சர்ச்சையை கிளம்பியுள்ள லாலு பிரசாத் யாதவ்..!
Kumbh Mela is meaningless Lalu Prasad Yadav has sparked controversy
டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 14 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், பலர், பிரயாக்ராஜ் நகரில் கூறப்படுகிறது.
கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் திரண்டதால் கடுமையன கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில்களை பிடிக்க பயணிகள் முண்டியடித்ததால் குறித்த அசம்வாவிதம் நடந்துள்ளது.
இந்த சம்பவம்குறித்து முன்னாள் ரெயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத், கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது, "கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். இது ரயில்வே துறையின் முழு தோல்வியாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும், பிரயாக்ராஜில் நடைபெறும் விழாவுக்கு மக்கள் அதிக அளவில் செல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த லாலு பிரசாத் யாதவ், "கும்பமேளாவே அர்த்தமற்றது" எனப் பேசியுள்ளார். இவர் இவ்வாறு பேசியுள்ளமை பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kumbh Mela is meaningless Lalu Prasad Yadav has sparked controversy