கோழிக்கோடு அருகே கொடூர விபத்து., அதிவேக கார்., அந்தரத்தில் பறந்த பெண்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு நெடுஞ்சாலை பகுதியில், நேற்றைய தினம் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அப்போது சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீதும், சாலையில் குழந்தைகளுடன் நடந்து வந்த மூன்று பெண்மணிகள் மீதும் அந்த கார் மோதியது.

இதில் மூன்று பெண்மணிகளில் ஒரு பெண்மணி காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் சாலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் ரம்யா என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kozhikodu nh car accident cctv


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->