10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறு மதிப்பீடு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம் தேதி வெளியான நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தேர்வில் மொத்தம் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு சற்று அதிகரித்துள்ளது. 

தேர்வு எழுதிய 8 லட்சத்தி 94 ஆயிரத்து 264 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. 

அதேபோல் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகின்ற 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறு தேர்வு ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வு துறை அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th Students Revaluation Date Notification 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->