நரபலி கொடுப்பதற்காக சிறுமி கடத்தல்... அதிர்ச்சி அளித்த வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


நரபலி கொடுப்பதற்காக சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் சிர்ஜி பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தநர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது டெல்லி பகுதியில் சிறுமி இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்பு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் சோனு  என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. சிறுமியை மீட்ட காவதுறையினர் சோனுவையும் அவரது நண்பர் நீதுவையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது நரபலி கொடுப்பதற்காக சிறுமிகள் கடத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அதை இதனால் பல இடங்களில் வரன் பார்த்து திருமணம் கைகூடவில்லை.  இதனால் அங்குள்ள மந்திரவாதி ஒருவர் சந்தித்த போது நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியதை அடுத்து தனது நண்பருடன் சேர்ந்து பக்கத்துவீட்டு வசித்துவரும் சிறுமியை நரபலி கொடுப்பதற்காக கடத்தியதாக விசாரணையில் தெரிவித்தார்.

அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மந்திரவாதியை தேடி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kidnapping of a girl for human sacrifice


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->