#BigBreaking || கேரள மாநிலத்தை பதற வைத்த சம்பவம்.! பெரும் சோகத்தில் மூழ்கிய திருவனந்தபுரம்.!
kerala thiruvanathapuram fire accident
திருவனந்தபுரம் அருகே வர்கலாவில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த தளவாபுரத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பிரதாபன் (வயது 62), ஷெர்லி (வயது 53), அபிராமி (வயது 25), அகில் (வயது 29) மற்றும் 8 மாத குழந்தை ரியான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரதாப் மகன் நிஹுல் பலத்த காயம் அடைந்து உள்ளார். பிரதாப் வர்கலாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தீ விபத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீவிபத்தில் பலியாகியுள்ள சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kerala thiruvanathapuram fire accident