கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Kerala next 3 days heavy rain and yellow Alert
கேரளாவில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் வருகிற மே 7-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு இன்றும், மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை இருக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Kerala next 3 days heavy rain and yellow Alert