இங்கிலாந்தில் கேரள இளைஞர் படுகொலை..ஒரே வாரத்தில் 3வது இந்தியர் கொலை.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 3 இந்தியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள சவுத்ஆம்டான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்கு கேரளாவை சேர்ந்த மேலும் சிலருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் அரவிந்த் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் கேரளாவை சேர்ந்த சலீம் என்பவர் அரவிந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கொலையாளி ஆன சலீமை கைது செய்தனர். மேலும் கொடைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தில் கடந்த ஒரே வாரத்தில் இதுவரை மூன்று இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala boy killed in England


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->