ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து! 3 CRPF வீரர்கள் பலி!
Kashmir crpf road accident
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தில் விழுந்து கடுமையான விபத்தில் சிக்கியது.
187வது பட்டாலியனின் பேருந்து, இன்று காலை சுமார் 10:30 மணியளவில் கட்வாவிலிருந்து பசந்த் கர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சாலை வழியில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் அந்த வாகனம் விழுந்தது.
பேருந்தில் மொத்தம் 18 வீரர்கள் இருந்த நிலையில், இதில் மூவர் உயிரிழந்தனர். மீதமுள்ள 15 பேர் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலமாக உடனடியாக உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலைப் பாதையின் நிலைமை, வாகனத்தின் தொழில்நுட்ப குறைபாடு உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
இந்த விபத்து குறித்து பாதுகாப்புப் படையினரிடையே மிகுந்த சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kashmir crpf road accident