நள்ளிரவில் 'கோர' விபத்து: பள்ளி மாணவர்கள் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஜமகண்டி தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்துச் சென்றனர். 

சுற்றுலா முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் குழந்தைகளை பள்ளி வாகனம் மூலம் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். 

நள்ளிரவு 12 மணியளவில் பள்ளி வாகனம் ஜமகண்டி தாலுகாவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த உழவு எந்திரம் பள்ளி வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. 

இந்த விபத்தில் பள்ளி மாணவிகள் ஸ்வேதா பாட்டில் (வயது 13), சாகர் கடகோலா (வயது 17), கோவிந்த ஜம்பகி (வயது 13), பசவராஜ் கோடகி (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். 

மேலும் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற பள்ளி குழந்தைகள் வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka school bus tractor collision 4 students death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->