டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷுக்கு, அமலாக்கத்துறை சம்மன்! - Seithipunal
Seithipunal


பணமோசடி வழக்கின் விசாரணையை முன்னிட்டு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரர் மற்றும் காங்கிரஸ் தலைவரான டி.கே. சுரேஷுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஐஸ்வர்யா கவுடா என்ற பெண், முன்னாள் எம்.பி. டி.கே. சுரேஷின் சகோதரி என போலியாக கூறி, பலரை ஏமாற்றியதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை கடந்த ஏப்ரலில் ஐஸ்வர்யாவை கைது செய்தது. இதனுடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னியும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த முறைகேடு வழக்கில், டி.கே. சுரேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதற்காக, ஜூன் 19-ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசடியில் பெறப்பட்ட பணத்தின் பாதை மற்றும் அதில் அவர் தொடர்புடையதா என்பதை தெளிவுபடுத்தவே இந்த விசாரணை எனக் கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataka ED Case DK Suresh DK Shivakumar 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->