தோட்டத்திற்கு சென்ற பெண் கொடூர கொலை.. விசாரணையில் பேரதிர்ச்சி.. கொலை செய்தும் பலாத்காரம் செய்த காமுகன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் சிந்தாமணி அருகேயுள்ள கோனாபூர் கிராமத்தை சார்ந்த 27 வயது இளம்பெண், திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி நிலக்கடலை தோட்டத்திற்கு அறுவடைக்கு சென்றிருந்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், தோட்டத்திற்கு சென்று பார்க்கையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். 

இதனைக்கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அவரின் உடலை கண்டு கதறியழுதனர். பின்னர் இது குறித்து பட்டலஹள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனையில் பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கோனாபூர் கிராமத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்த கே.என்.சங்கரப்பா (வயது 28) என்பவரை சந்தேகத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்யவே, அவர் தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், " சங்கரப்பா ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மனைவி பிரிந்து சென்றுள்ளார். 

பின்னர் வேலைக்காக கோனப்பூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், கூலி வேலைக்கு சென்ற போது பெண்ணை பார்த்துள்ளார். அவரின் மீது ஆசைகொண்ட கொடூரன், பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அவனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கரப்பா பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதில், சம்பவ இடத்திலேயே பெண்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பெண் துடிதுடித்துக்கொண்டு இருக்கும் போதும், பலியான பின்னரும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த சமப்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Chikkaballapur girl sexual abuse and murder 23 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->