கல்லூரி மாணவி ஐவரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள காகதி கல்லூரி மாணவி, அனைத்து நண்பருடன் அங்குள்ள கோவில் குலத்திற்கு கடந்த 2017 ஆம் வருடம் பிப்ரவரி 15 ஆம் தேதி சென்றுள்ளார். இதன்பின்னர், அங்கு 2 பேரும் குலத்தின் அருகே அமர்ந்துபேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், அங்கு வந்த 5 வாலிபர்கள் மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு, மாணவியை கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில், மாணவியை சீரழித்த சஞ்சு தட்டி, சுரேஷ், சுனில், மகேஷ், சோமசேகர் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பான வழக்கு பெலகாவி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையில், காமுகன்கள் மீதான குற்றம் ஆதாரத்துடன் நிரூபணம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இவர்கள் ஐவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Belagavi college girl 2017 sexual abuse girl court judgement 13 November 2020


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->