தேசிய நெடுஞ்சாலையில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு - தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசார்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர், நறுவால்-சித்ரா நெடுஞ்சாலையில் உள்ள காவலர் சோதனை சாவடி அருகே சந்தேகமளிக்கும் வகையில் பொருள் ஒன்று கிடைப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்திய போது 2 கிலோ எடை கொண்ட டைமர் அடிப்படையிலான வெடிபொருள் சாதனம் டிபன் பாக்ஸில் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பின்னர் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதனை செய்தது யார், அவர்களின் சதி திட்டம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu police defused detonated bomb


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->