ஜம்மு காஷ்மீர்! பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் குல்சார் அஹமது என்ற பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் அவனிடமிருந்து வெடிமருந்துகள், ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையிலும், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jammu Kashmir encounter one terrorist


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->