வேதனை அளிக்கிறது! விமான விபத்து குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...!
Its painful Chief Minister MK Stalin expressed concern over the plane crash
குஜராத்தில் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா போயிங் 787 விமானம் லண்டன் (காட்வீக்) புறப்பட்டது.இந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேலும் இந்த விமானம் டேங்கில் எரிபொருள் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில், விமான விபத்து அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
மேலும், இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது,"அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.
பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Its painful Chief Minister MK Stalin expressed concern over the plane crash