வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்.! - Seithipunal
Seithipunal


இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து இன்று காலை 9.18 மணி அளவில் எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 

இந்த செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் 8.7 கிலோ எடை 'ஆஸாதிசாட்-2' செயற்கைக்கோள் 750 மாணவிகள் இணைந்து உருவாக்கியது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் தோல்வி அடைந்த நிலையில், இஸ்ரோ தற்பொழுது மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி2  ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO successfully launches SSLV D2 rocket


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->