சந்திரயான்-2 வை அடுத்து யாருமே நெருங்க முடியாத இடத்திற்கு விண்கலம் அனுப்பப்போகும் இந்தியா., இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு !! - Seithipunal
Seithipunal


கடந்த 15 ஆம் தேதி ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு இதையடுத்து, விண்கலத்தில் உள்ள கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம்  வால்வில் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அதனை அடைக்கும் பணி 7 நாட்களாக நடைபெற்றது இதையடுத்து இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், சந்திரயான்-2 விண்கலம் வெற்றகரமாக ஏவப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 2 கால் பதிக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது எனவும் கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார் அப்போது அவர் கூரியதவது, சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருவதவாவும் , அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டம் இருப்பதாக தெரிவித்த அவர் மேலும் 45 நாட்களில் சந்திரயான்-2 நிலவை சென்றடையும், எந்த நாடும் செல்லாத இடத்தில் சந்திரயான்-2 ஆய்வு மேற்கொள்ள உள்ளது இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

isro scientist announced next plan


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->