மாற்று மத ஆணுடன் ஏன் பழகுகிறாய்?! இஸ்லாமிய பெண்ணை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


மும்பை : மாற்றுமத ஆண் நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணை மூன்று நபர்கள் வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், சம்பாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு நினைவுச் சின்னத்தை பார்வையிடுவதற்காக இஸ்லாமிய பெண் ஒருவரும், அவருடைய ஆண் நண்பரும் சென்றுள்ளனர்.

அப்போது அந்த இஸ்லாமிய பெண்ணை தடுத்து நிறுத்திய மூன்று இளைஞர்கள் (இஸ்லாமிய இளைஞர்கள் என்று சொல்லப்படுகிறது), ஏன் மாற்று மத ஆணுடன் பழகுகிறாய், ஏன் அவருடன் வெளியே செல்கிறாய்? என்று அவரிடம் ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் அந்த காணொளியில் அந்த இளைஞர்கள் இஸ்லாமிய பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றும், தகாத முறையில் நடப்பதும் பதிவாகியுள்ளது.

இந்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள போலீசார். சம்பந்தப்பட்ட அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் வேலூர் கோட்டையில் இஸ்லாமிய பெண்கள் மாற்று மத ஆண்களுடன் செல்வதை, இஸ்லாமிய இளைஞர்கள் தடுத்து நிறுத்தி, அவர்களை வீடியோ எடுத்து தொந்தரவு செய்த சம்பவம் அரங்கேறியது. இதற்கு உடனடியாக தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Islam girl harassed islam boys


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->