பிரபல நாட்டில் இந்தியர்கள் நுழைய தடைவிதிப்பு.. அரசு அறிவிப்பு.!
Indian picnicers not allowed Nepal
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதன்காரணமாக அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு நேபாளத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பைட்டடி என்ற மாவட்டத்தில் 4 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 4 பேரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Indian picnicers not allowed Nepal